பாரத கலாச்சாரத்தில் ஒவ்வொருவரும் அம்மா-அப்பா காலில் விழுந்து வணங்குவது,பாத பூஜை செய்வது போன்றவை இன்றும் காணக்கூடியது. குலகுரு(தீட்சை மோட்சம் என்று வழிகாட்டுதலுக்கும் ஒழுக்கத்திற்கும்),ஞானகுரு(அறிவை வழங்குதலுக்கும்) இருந்து வருகின்றனர். காணிதெய்வம் குலதெய்வம் என சகல தெய்வவழிபாடுகளும் சிறப்பாக நடை பெற்று வருவன. அண்மைகாலமாக உலகமய தாக்கத்தால் இவற்றில் தொய்வு ஏற்பட்டாலும் இவற்றை தொடர்ந்து நடந்திட சில விளக்கங்களையும், புரிதலையும் நாம் உணர வேண்டிய நேரமிது.